என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
    X
    திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

    காவேரிப்பாக்கம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

    காவேரிப்பாக்கம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது41) கட்டிட மேஸ்திரி. 

    அதே பகுதியில் இவர் தனது விவசாய நிலத்தில் மாட்டு பன்னை நடத்தி வருகிறார். மேலும் இவர் வழக்கமாக இரவு வீட்டில் படுக்காமல் மாட்டு பன்னைக்கு சென்றுள்ளார்.

     இந்நிலையில் மர்ம நபர்கள் ரமேசின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவையும் உடைத்து அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் காலையில் வீட்டை திறந்த அவர்களுக்கு பீரோவில் இருந்த துணிகள் தூக்கி வீசப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
    Next Story
    ×