என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
கிராமப்புற மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
காவல்துறையை கண்டித்து கிராமப்புற மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
புதுச்சேரி:
புதுவை கிராமப்புற மக்கள் இயக்கம், தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை அமைப்புகள், சமூகநல இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் காவல்துறையின் அடக்குமுறை, மனித உரிமை மீறலை கண்டித்து ஜென்மராக்கினி ஆலயம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளவரசன், அமைப்பு செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறுவன தலைவர் சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன், தேசிய ஜனசேனா தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
Next Story






