என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சூப் கடைக்காரர் எலிமருந்து தின்று தற்கொலை
Byமாலை மலர்9 April 2022 6:05 AM GMT (Updated: 9 April 2022 6:05 AM GMT)
மனைவி பிரிந்து சென்றதால் சூப் கடைக்காரர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி திருக்குளம் வீதியை சேர்ந்த டேவிட் ராஜன் (வயது 34). இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். டேவிட் ராஜன் சூப் கடை நடத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக டேவிட் ராஜனைவிட்டு பிரிந்து அவரது மனைவி மஞ்சு 2 மகள்களுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் டேவிட் ராஜன் தனது தாய் செல்வியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் டேவிட் ராஜனின் மூத்த மகள் பூப்பெய்தார். இந்த தகவலை மஞ்சு டேவிட் ராஜனுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவி மகள்களுடன் பிரிந்து சென்ற வேதனையில் மகள் பூப்பெய்த நிகழ்ச்சியை மஞ்சு தெரிவிக்காததால் டேவிட் ராஜன் மனமுடைந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த டேவிட் ராஜன் சம்பவத்தன்று புதுவை ரெயின்போ நகரில் தமிழ்சங்கம் எதிரே அமைந்துள்ள பூங்காவில் எலிமருந்தை தின்று மயங்கி கிடந்தார்.
பின்னர் இது பற்றி தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் பதறிப்போன செல்வி சம்ப இடத்துக்கு விரைந்து வந்து டேவிட் ராஜனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த டேவிட் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X