search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்,மோர் பந்தலை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்த காட்சி.
    X
    நீர்,மோர் பந்தலை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்த காட்சி.

    அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

    சாரம் அவ்வை திடலில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    காமராஜ் நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் சாரம் அவ்வை திடலில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கிழக்கு மாநில இணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் அன்பழகன் உடையார், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் கமலா, இலக்கிய அணி பொருளாளர் குணா, இணை செயலாளர் ரவி, துணை செயலாளர் சத்யா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி ஜெயலலிதா பே ரவை செயலாளர் சுகுமார், வார்டு  செயலாளர்கள் கோவிந்தராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×