என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
அரக்கோணத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரக்கோணத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தலைமையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் சி.துரைராஜ் தொடங்கி வைத்தார். ஞானமுருகன் முன்னிலை வகித்தார்.இதில் பொன்.சிட்டி பாபு, பார்த்திபன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






