என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
ஆணாக மாற முயன்ற கல்லூரி மாணவிகள் சென்னையில் மீட்பு
கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீட்கப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ. ஆங்கிலம் மற்றும், பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும், மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவரது செல்போனை வாங்கி சென்றிருப்பதது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும், தற்பொழுது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 5 ஆம் தேதி காலை கல்லூரி பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
அதில் ஒரு பெண்ணுக்கு, பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் இருப்பதும், கையில் காப்பு போடுவதும் பூ, பொட்டு வைக்காமலும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது காணாமல் போன மாணவிகள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
காணாமல் போன மாணவிகள் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மாலை ஒரு மாணவி ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் சென்னையிலிருந்து 2 மாணவிகளையும் மீட்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பால் காதல் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ. ஆங்கிலம் மற்றும், பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும், மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவரது செல்போனை வாங்கி சென்றிருப்பதது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும், தற்பொழுது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 5 ஆம் தேதி காலை கல்லூரி பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
அதில் ஒரு பெண்ணுக்கு, பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் இருப்பதும், கையில் காப்பு போடுவதும் பூ, பொட்டு வைக்காமலும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது காணாமல் போன மாணவிகள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
காணாமல் போன மாணவிகள் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மாலை ஒரு மாணவி ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் சென்னையிலிருந்து 2 மாணவிகளையும் மீட்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பால் காதல் ஏற்பட்டுள்ளது.
Next Story






