என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வேளாண் அறிவியல் நிலைய ஊழியர் மயங்கி விழுந்து சாவு
வில்லியனூரில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கோபாலன் கடை காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன். (வயது 44) இவர் புதுவை குரும்பா பேட்டில் உள்ள அரசு வேளாண் அறிவியல் நிலையத்தில் தினக்கூலி ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவருக்கு ஜான்சிலூர்து என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகையன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
6 மணிக்கு வீடு திரும்பிய அவர் குளித்து விட்டு வீட்டு வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது தலைவலிப்பதாக கூறி தைலத்தை தடவிக்கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார். அப்போது திடீரென முருகையன் மயங்கி சரிந்தார்.
இதனை கண்ட அவரது மனைவி ஜான்சி லூர்து பதறியடித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ஜான்சி லூர்து கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






