என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்7 April 2022 5:05 AM GMT (Updated: 7 April 2022 5:05 AM GMT)
புதுவை மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) 1.1.2004-ல் அமல்படுத்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்பட பணப்பலன்கள் இது வரை முழுமையாக வழங்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ஏற்காமல் பழைய திட்டத்தையே பின்பற்றுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, புதுவை யூனியன் பிரதேசத்தில் டி குரூப் பணியாளர்களுக்கும், இப்போதைய குரூப் சி பணியாளர்களுக்கும் மட்டுமாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X