என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடா வுமான தாமரை ராஜேந் திரன் தலைமையில்   நடைபெற்றது.

    இதில் முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணி யம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அணிச் செயலாளர்கள் மாணவரணி சங்கர், மகளிரணி ஜீவா, இளை ஞரணி சிவசங்கர், வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி,

    சிறுபான்மை பிரிவு அக்பர் செரிப், தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன், பாசறை ரீடு செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், முன்னாள் அரசு வக்கீல் சண்முகம், ராமகோவிந்தராஜன், சாந்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உட்பட அனைத்துப் பிரிவு பொறுப் பாளர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×