என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டேங்கர் லாரி கவிழ்ந்து கிடந்த காட்சி.
    X
    டேங்கர் லாரி கவிழ்ந்து கிடந்த காட்சி.

    காவேரிப்பாக்கம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் ஆறாக ஓடிய டீசல்

    காவேரிப்பாக்கம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியது.
    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து ராணிப்பேட்டையை நோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. 

    அப்போது பசு மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  பசுமாடு ஒன்று பலியானது. லாரி ரோட்டில் கவிழ்ந்து லாரியிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் சாலையில் ஆறாக ஓடியது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு துறையை சேர்ந்த தலைமை அலுவலர் லக்ஷ்மி நாராயணன் மாவட்ட உதவி அலுவலர் தீயணைப்பு வீரர்கள் தீ பற்றாமல் இருக்க லாரியின் மீது ரசாயன நுரைக்கலவையை தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காவேரிபாக்கம் போலீசார்   போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பணியில் ஈடுபட்டனர். 

     கிரேன் மூலம் கவிந்து கிடந்த டேங்கர் லாரியை தீயணைப்புப் படையினர் 3 மனி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை&பெங்களூர்  சாலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    Next Story
    ×