என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிவியல் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தப்படும்
    X
    அறிவியல் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தப்படும்

    அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளி அளவில் நடைபெற்ற இந்த கண்காட்சியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.வீரமணி தொடக்கி வைத்தார்.
    இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் 50 பேர்,  இயற்கை வளம் மேலாண்மை, விவசாயம், உடல் நலன் விழிப்புணர்வு, விளைபொருள்களின் பயன்பாடு, போக்குவரத்து மேலாண்மை,

    கணித மாதிரிகள், நீர் வளங்களை பாதுகாத்தல், மறு சுழற்சி, கழிவு மேலாண்மை,தொலை தொடர்பு, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சித்து வைத்திருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் பழனிசாமி செய்திருந்தார். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த  மாணவர்களின் படைப்புகளை அருகிலுள்ள பள்ளி ஆசிரியர்,  ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் 300 பேர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×