search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு சாவு

    கோரிமேடு அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு இறந்து போனார்.
    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. இவரது மகன் பாலு(வயது30). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்தார்.

    மேலும் மது பழக்கத்துக்கு ஆளான பாலு தினமும் மது குடித்துவிட்டு தனது தாய் சுசீலாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு வலியுறுத்தி வந்தார்.  அதற்கு சுசீலா மது குடிக்காமல் வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்து வந்தார்.

    ஆனாலும் பாலு மது பழக்கத்தை கைவிடவில்லை. இதனை அவரது தாய் சுசீலா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலு மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    தனது நண்பர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்த நிலையில் தனக்கு மட்டும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்யவில்லையே என பாலு விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

    மது குடித்து விட்டு அருகில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்ற பாலு அங்கு மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்சினி வீதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் முகேஷ்கண்ணன்(17). 

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தன் இறந்து விட்டார். அவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் முகேஷ் கண்ணன் தனது பாட்டி புஷ்பவள்ளி பராமரிப்பில் இருந்து வந்தார். மேலும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் தந்தை இறந்து விட்ட நிலையில் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த முகேஷ்கண்ணன் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×