என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மூதாட்டி எலி மருந்து தின்று தற்கொலை
சண்முகாபுரத்தில் மகனுடன் தகராறில் மூதாட்டி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நிலையவீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது63).
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்து விட்டார். இதையடுத்து ராஜேஸ்வரி தனது மகன் நடராஜனுடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரி தனது மகன் மற்றும் குடும்பத்தி னருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் அங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ராஜேஸ்வரிக்கும் அவரது மகனுக்கும் சிறிய வாய்தகராறு ஏற்பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் ராஜேஸ்வரி சாப்பிடாமல் யாருடனும் பேசாமல் மன விரக்தியுடன் இருந்து வந்தார்.
மகன் தன்னிடம் தகராறு செய்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை அவர் எடுத்து தின்று விட்டார். ராஜேஸ்வரி தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் நடராஜன் தனது தாயிடம் விசாரித்தார்.
அப்போது அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






