என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண்ணிடம் நகை பறிப்பு

    ஏம்பலத்தில் திருமண மண்டப வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் மர்ம வாலிபர் நகையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆளவந்தார். இவர் ஏம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தனது அண்ணன் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தனது மைத்துனர் சவுந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி கங்கா ஆகியோருடன் சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து தனது மைத்துனர் மற்றும் அவரது மனைவி கங்காவை ஊருக்கு வழி அனுப்பி வைக்க திருமண மண்டப வாசலில் 3 பேரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மர்ம வாலிபர் திருடீரென கங்கா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றும் இயலவில்லை. அவர் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார். பறிபோன செயினின் மதிப்பு ரூ.1அரை லட்சம் ஆகும்.

    இந்த அதிர்ச்சியில் கங்கா மயங்கி சாய்ந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    இதுகுறித்து ஆளவந்தார் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமண மண்டப வாசலில் பொருத்தப்பட் டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×