என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெமிலி அருகே வியாபாரி தீக்குளித்து தற்கொலை

    நெமிலி அருகே வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான் (வயது 36). தள்ளுவண்டியில் இறைச்சியை பக்கோடா போட்டு விற்பனை செய்து வந்தார். 

    இவருக்கு கடந்த 10 வருடத்துக்கு முன்பு வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பர்வீனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பர்வீனா தனது மகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 

    இதனால் மன உளைச்சலில் இருந்த மஸ்தான் திடீரென மண்எண்ணையை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மஸ்தான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×