என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமானூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற ப
திருமானூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்
திருமானூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் 2021&22ம் ஆண்டு அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மிமி க்கான திட்ட செயலாக்கக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் IIல் முதல் கட்டமாக தேர்ந் தெடுக்கப்பட்ட அழகியமன வாளம், சின்னப்பட்டாக்காடு, கோமான், ஏலாக்குறிச்சி,
கீழகாவட்டாங்குறிச்சி, கண்டிராதித்தம், பூண்டி ஆகிய 7 ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர் கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பி.எல்.எப். உறுப்பினர்கள், எஸ்.பி.எம். ஊக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்மிமி&ல் மேற்கண்ட ஊராட்சிகளில் நீர் நிலைகளை புனரமைத்தல், குக்கிராமங்களின் சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களை மேம்படுத்துதல், சமத்துவசுடுகாடு, இடுகாடு ஆகிய இடங்களில் தேவையான வசதிகளை மேம்படுத்துதல்,
பள்ளிகளில் உட் பட்டமைப்பு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல், பசுமையான மற்றும் சுத்தமான கிராமங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைப் படுத்துதலை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பணிகள் நடைபெறவுள்ளது.
மேலும், இப்பணிகளை சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்து நிர்வாக அனுமதிக்காக விரைவாக அனுப்பிட சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
Next Story






