search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

    புதுவை லாஸ்பேட்டையில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை பூஞ்சோலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மகள் தனலட்சுமி (வயது 30) இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலபதி என்பவ ருடன் திருமணம் நடந்தது. 

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவர் வெங்கடா சலபதி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இதனால் தனலட்சுமி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தையை பராமரிக்க தனலட்சுமி வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். ஆனால் சரியான வேலைகிடைக்க வில்லை. மேலும் குடும்பம் நடத்த முடியாமல் தனலட்சுமி சிரமப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

    வீட்டில் அனைவரும் தூங்கிய  பின்னர் தனலட்சுமி வீட்டின் சமையறைக்கு சென்று அங்குள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு  தொங்கினார். 

    நள்ளிரவு திடீரென எழுந்து பார்த்த கஸ்தூரி படுக்கையறையில் மகளை காணாமல் சந்தேக மடைந்து சமையல் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு மகள் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  தனலட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×