என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்குவை தடுக்க சுகாதார துறை இயக்குநர் ஸ்ரீராமுலு விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி வைத்தார்.
    X
    டெங்குவை தடுக்க சுகாதார துறை இயக்குநர் ஸ்ரீராமுலு விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி வைத்தார்.

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

    பாகூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 262 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டனர். தற்போது, பாதிப்பு படிப்படியாக குறந்து மார்ச் மாதம் 105 பேர் பாதிக்கப்பட்டனர்.

     இதில் குறிப்பாக 40 பேர் பாகூர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால், புதுச்சேரி அரசு நலவழித்துறை, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக, பாகூர் பகுதி முழுவதும் தீவிர டெங்கு ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நேற்று பாகூர் பேட்டில் டெங்கு ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுகாதார இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு பிரசாரத்தை கொடியசைத்து துடங்கி வைத்தார்.
     
    துணை இயக்குனர்கள் டாக்டர் முரளி, ரகுநாதன், மலேரியா தடுப்பு திட்ட உதவி இயக்குனர் வசந்தகுமாரி, தொழில் நுட்பவல்லுனர் செந்தில் வேலவன், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கலந்து கொண்டனர்.
    Next Story
    ×