search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் ஏழை பெண்களுக்கு கவர்னர் தமிழிசை தையல் எந்திரம் வழங்கினார்.
    X
    விழாவில் ஏழை பெண்களுக்கு கவர்னர் தமிழிசை தையல் எந்திரம் வழங்கினார்.

    அவமதிப்பவர்கள் தலைகுனியும் அளவுக்கு பெண்கள் தலைநிமிர வேண்டும்- கவர்னர் தமிழிசை அறிவுரை

    பெண்களை குறைவாக நினைக்கும் சமுதாய சிந்தனை இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பே‌ஷன் டாட் ஹைடெக் கம்ப்யூட்டரைஸ்டு தையல் பயிற்சி நிறுவனம் சார்பில் அரியாங்குப்பம் அகில பாண்டுரங்கன் திருமண மண்டபத்தில் பெண்கள் தின விழா நடந்தது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு தையல் பயிற்சி பெற்ற ஏழை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் எந்திரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையின் வளர்ச்சிக்காக மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பெண்கள் எதற்காகவும் மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது.

    பெண்களை குறைவாக நினைக்கும் சமுதாய சிந்தனை இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கான முழு அதிகாரமும் உரிமையும் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அதன் பிரதிநிதியாக நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.

    பெண்களுக்கு யார் மரியாதை கொடுக்க மறுக்கிறார்களோ, அவமதிக்கிறார்களோ அவர்கள் தலைகுனியும் அளவுக்கு பெண் சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும்.

    பெண்கள் தலை நிமிர வேண்டும் என்பது என்னுடைய ஆவல். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும் போது தன்னம்பிக்கை வந்துவிடும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதை கைத்தொழில்கள் நமக்கு அளிக்கும். பெண்கள் யாருக்காகவும் தலைகுனிய கூடாது. தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். அது தன்னம்பிக்கையினால் இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×