என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி அ.தி.மு.க.

    என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் புதுவை அ.தி.மு.க. தொடர்கிறது என்று அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. 

    மக்கள் விரோத காங்கிரஸ்-தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றி வாய்ப்பை மக்கள் தந்தனர். 

    உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தைபோல் புதுவையிலும் பா.ஜனதா தனியாக நிற்கும் என தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தலைமை யில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவோம். 

    இந்த கூட்டணியில் எவ்வித மான மாற்றமும் இல்லை. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டால், தலைமைக்கழகம் முடி வெடுத்து அறிவிக்கும். 

    இன்றைய நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணியில் அ.தி.மு.க. தொடர்கிறது. பா.ஜனதா தனித்து நிற்பது என்பது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு.
    சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தை மக்களுக்கு பயன்படுத்தாமல், முகஸ்துதி அரசியல் செய்தும், பிரதமரை இழித்து பேசுவதையும் தி.மு.க. செய்துள்ளது. 

    மேகதாது அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் எடுத்து வரும் அத்தனை நடவடிக்கைக்கும் அரசியல் வித்தியாசம் பாரக்காமல் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஒருசேர இணைந்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர். 

    காரைக்கால் விவசாயி கள் நலனுக்காக அணை கட்டும் முயற்சியை தடுக்க புதுவை சட்டமன்றத்தில் தீர்மான கடிதம்கூட தி.மு.க. தரவில்லை. 
    கடந்த காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி ஒருமுறை கூட முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. இப்போது முழு பட்ஜெட் பற்றி பேச தி.மு.க.வுக்கு  தகுதி இல்லை. 

    இவ்வாறு அவர் கூறி னார்.
    Next Story
    ×