என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து திருட்டு
Byமாலை மலர்31 March 2022 5:53 AM GMT (Updated: 31 March 2022 5:53 AM GMT)
காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன்(வயது31). மீனவர். இவர் பெரியகாலாப்பட்டில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து ரூ-.1லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணமும், அரை பவுன் மோதிரமும் கொண்டு சென்றார்.
மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணம் ரூ-.3 ஆயிரம் மற்றும் மோதிரத்தை வைத்துவிட்டு வங்கி சென்றார்.
பின்னர் நகையை மீட்டுக் கொண்டு அய்யனாரப்பன் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதில் வைத்திருந்த ரூ-.3ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அரை பவுன் மோதிரம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அய்யனாரப்பன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் பதிவு எண் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வங்கி எதிரே நின்று வங்கிக்கு செல்வோரை கண்காணிப்பதும், பின்னர் அதில் ஒருவன் அய்யனாரப்பனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்து நகை-பணத்தை திருடிக்கொண்டு தயாராக நின்றுக்கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X