என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சவால்

    ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? என புதுவை காங். எம்.எல்.ஏ.வுக்கு வி.பி.ராமலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நியமன உறுப்பினர் ராமலிங்கம் பேசியதாவது:-

    மத்திய அரசும், பிரதமரும் நாட்டின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வரும்போது அதை பாராட்ட வேண்டும், வரவேற்க வேண்டும். உக்ரைனில் போரில் சிக்கி தவித்த 18 ஆயிரம் மாணவர்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது. 

    கொரோனா காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கியுள்ளனர். மத்திய அரசின் செயல்பாட்டுக்கு 5 மாநில தேர்தலில் 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதே மக்கள் அளித்த அங்கீகாரம் தான். 

    புதுவையில் கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சி நன்றாகவே உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கட்சி தலைவர்போல செயல்பட்டதால்தான் எதிர்பாராத பல விளைவுகள் ஏற்பட்டது என பேசினார். 

    அப்போது காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் குறுக்கிட்டு பேசினார். இதனால் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் விட்டுக்கொடுத்ததால்தான் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். 

    புதுவையில் லாஸ்பேட்டை தொகுதியில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். நான் இப்போது சவால் விடுகிறேன். நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன். தைரியமிருந்தால் நீங்களும் ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். தேர்தலில் போட்டியிடலாம். யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்த்துவிடலாம் என ராமலிங்கம் சவால் விட்டார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உங்களிடம் பணம் உள்ளது. தேர்தலை சந்திப்பீர்கள் என தெரிவித்தார்
    Next Story
    ×