என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தியாகதுருகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மரணம்

    மனநலம் பாதித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணையில் மனநலம் பாதித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத பெண் எனவும், இவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.

    இது குறித்து வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×