search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

    இதில் இளைஞர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் அவர்கள் தங்களது சுய விவரம், ஆதார் அட்டை, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும். 

    இந்த முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நெமிலி, சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடந்தது.

    நாளை (புதன்கிழமை) ஆற்காடு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், வருகிற 31&ந் தேதி வாலாஜா, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங் களிலும் நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விழா நடைபெற உள்ளது.

    ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    Next Story
    ×