search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
    X
    கலை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள்

    அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட க்காட்சிகளும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் , நாடகம், தப்பாட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேட அணிவகுப்புகள் நடைபெற்றது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    Next Story
    ×