என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி
புதுவையில் நாளை பஸ், டெம்போ ஓடாது- தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை
புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.
புதுவையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடைகளை அடைக்கும்படி வற்புறுத்தினாலோ, பஸ், ஆட்டோ, டெம்போக்களை இயக்க தடை ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கங்களில் பெரும்பாலானவை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
இதனால் புதுவையில் நாளை (செவ்வாய்கிழமை) பஸ், ஆட்டோ, டெம்போ ஆகியவை ஓடாது. அதே நேரத்தில் அரசு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 திருப்புதல் தேர்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் பள்ளிகளில் அந்த வகுப்புகளை மட்டும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மற்ற வகுப்புகள் இயங்காது. அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் இயங்கும்.
அகில இந்திய அளவில் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.
புதுவையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடைகளை அடைக்கும்படி வற்புறுத்தினாலோ, பஸ், ஆட்டோ, டெம்போக்களை இயக்க தடை ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கங்களில் பெரும்பாலானவை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
இதனால் புதுவையில் நாளை (செவ்வாய்கிழமை) பஸ், ஆட்டோ, டெம்போ ஆகியவை ஓடாது. அதே நேரத்தில் அரசு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 திருப்புதல் தேர்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் பள்ளிகளில் அந்த வகுப்புகளை மட்டும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மற்ற வகுப்புகள் இயங்காது. அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் இயங்கும்.
பந்த்தையொட்டி நாளை தொழிற்சங்கங்கள் சார்பில் புதுவை, காரைக்காலில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. புதுவையின் முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதையும் படியுங்கள்... அமெரிக்க திரைப்படம் "டியூன்" 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது
Next Story






