என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம்  வெள்ளாளர் தெருவைச்  சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்  மகன்  மனோகரன். வயது 22. இவருக்கும் 11 ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில்  அச்சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன் படுத்திய மனோகரன் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி  பாலியல் பலாத்காரம்  செய்து  துன்புறுத்தியுள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் மனோகரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×