என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
ஆண்டிமடத்தில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்-:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசாநகரைச் சேர்ந்தவர் முபாரக். தொழிலாளி. இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துறை குறிச்சி கிராமம் வேலன் என்பவரது மகள் மஞ்சுளாதேவியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு சாரு என்ற 9 வயது பெண் குழந்தையும், பைசல் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் முபாரக் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் மஞ்சுளாதேவி கோபித்துக்கொண்டு திருப்பூர் சென்று வேலை செய்து வந்ததாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டில் இருந்த மஞ்சுளாதேவியுடன் நடந்த தகராறில் முபாரக் ஆத்திரமடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முபாரக் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முபாரக்கின் தாய் பிபி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசாநகரைச் சேர்ந்தவர் முபாரக். தொழிலாளி. இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துறை குறிச்சி கிராமம் வேலன் என்பவரது மகள் மஞ்சுளாதேவியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு சாரு என்ற 9 வயது பெண் குழந்தையும், பைசல் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் முபாரக் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் மஞ்சுளாதேவி கோபித்துக்கொண்டு திருப்பூர் சென்று வேலை செய்து வந்ததாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டில் இருந்த மஞ்சுளாதேவியுடன் நடந்த தகராறில் முபாரக் ஆத்திரமடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முபாரக் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முபாரக்கின் தாய் பிபி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






