என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலி
Byமாலை மலர்27 March 2022 5:45 AM GMT (Updated: 27 March 2022 5:45 AM GMT)
பற்பசை என நினைத்து எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி நவசக்திநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது75). தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி மீது பாசம் கொண்ட சம்பந்தம் திடீரென மனைவி இறந்ததால் துக்கத்தை மறக்க மது குடிக்க தொடங்கினார். பின்னர் அவர் மது போதைக்கு அடிமையானார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சம்பந்தம் குடிபோதையில் பற்பசை என்று நினைத்து எலி மருந்தில் பல் துலக்கினார். பின்பு இதுபற்றி தெரியவரவே சம்பந்தம் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி சம்பந்தம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X