என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.50  வசூல் செய்யப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன் வழங்க வேண்டும்.
     
    புறம்போக்கு, ஏரி, குளம் வாரி, மயானம் ஓடை ஆகிய பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வேளாண் துறை மூலம் வழங்கப்படும் எந்திரங்கள் அனைத்தும் பழைய விவசாயிகளுக்கு வழங்காமல் புதிய விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்  கூறுகையில், பொதுமக்களின் போராட்டங்களையடுத்து அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்துக்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    அதனை ஆய்வு செய்ய ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டு பின்னர் மாநில நீர் வள ஆதார வல்லுநர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. ஆனால் தற்போது தமிழக அரசு, இந்த திட்டம் மக்களுக்கு பயனற்றது அறிவித் திருப்பது  விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக மறு பரிசீலனை செய்து, இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய இலவச மின்சார இணைப்புக்கு பொதுப்பணித் துறையின் தடைச்சான்று கோரப்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமம் ஏற்படுகிறது. எனவே விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் எச்.பி. பயன்படுத் தப்பட்ட சான்றளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிக ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    விவசாயிகள் விசுவநாதன், செந்தில், விஜயகுமார் கூறுகையில், யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்லூர் மருதையாற்றின்  குறுக்கு பாலம் கட்ட வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி, அதனை ஆழப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகள் மீது நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். 
    Next Story
    ×