என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முத்தியால்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்

    முத்தியால்பேட்டையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான நாவற்குளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38) கட்டிடத்தொழிலாளி.  இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியால் பேட்டை சோலைநகரில் வசித்து வந்தார். இடையில் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே நாவற்குளத்தில் குடியிருந்தார். 

    இந்த நிலையில் நேற்று கட்டிட வேலைக்காக தியாகராஜன் முத்தியால்பேட்டை சோலை நகருக்கு சென்றார். அங்குள்ள கடற்கரைக்கு சென்ற போது அப்பகுதியில் வசிக்கும் உதயகுமார் (60) என்பவர் தனது வீட்டருகே எப்படி வரலாம் என்று கூறி தகராறு செய்தார்.


    இதில் இருதரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தியாகராஜனை தாக்கினார்.  

    அப்போது தியாகராஜனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோபி மற்றும் ராஜவேலு ஆகியோர் சேர்ந்து உதயகுமாரை தடியால் தாக்கினர். இதில் தலை மற்றும் மார்பில் படுகாயம் அடைந்த உதயகுமார் புதுவை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். 

    இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×