என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    வரதராஜன்பேட்டையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு வலியுறுத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ் தலைமையில், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் முன்னிலையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ஜெயசெல்வி வரவேற்றுப் பேசினார். 

    இதில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்களில் தலைவர் உட்பட 12 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் வார்டு எண் 9, 7, 1, 15, 10 உள்ளிட்ட வார்டுகளில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும், 

    பட்டதெரு ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும்,15-வது வார்டு ஆழ்குழாய் கிணற்றில் சுத்தம் செய்து மேற்கு ஆரோக்கியபுரம் மாதா கோயில் அருகே சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும்,  

    நந்தவன குட்டையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய பைப்லைன் அமைத்து ஆரோக்கியபுரம் மற்றும் மேற்கு ஆரோக்கியபுரம் வரையில் குடிநீர் செல்லும் வகையில் பைப்லைன் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

     இதில் 7, மற்றும் 11-வது வது வார்டு பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய போர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
    Next Story
    ×