என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடம் கவரிங் செயின் பறித்த வாலிபர்
கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடம் கவரிங் செயினை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த (வயது 19) மாணவி சென்னை பூந்தமல்லி அருகேஉள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை கல் லூரிக்கு செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது வாலிபர் ஒருவர் மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, மாணவி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றார்.
இது குறித்து மாணவி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை மிரட்டி, கவரிங் நகையை பறித்து சென்ற அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த சோபன் (வயது 24) என்பவரை கைதுசெய் தனர்.
விசாரணையில் இவர் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






