என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அருகே கருப்பூர் சேனாபதி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி
    X
    அரியலூர் அருகே கருப்பூர் சேனாபதி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி

    விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்யும் வகையில் தமிழக அரசின்  தோட்டக்கலைத் துறையின் மூலம் நவீன வேளாண் தொழில் நுட்பங் கள் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட் டுள்ள வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கருப்பூர் சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரது வயலில் 3 எக்டேர் பரப்பளவில் இயற்கை பண்ணைய திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டுள்ள மா, கொய்யா, கத்தரி, தக்காளி, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பயிர்களையும்,

    தேளுர் கிராமத்தைச்சேர்ந்த விவசாயி வேலு என்பவரது வயலில் 1 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், கத்தரி, புடலை, சாமந்தி பூ உள்ளிட்ட பயிர்களையும், விவசாயி கண்ணதாசன் என்பவரது வயலில் 0.80 எக்டேர் பரப்பளவில் பயிரிடப் பட்டுள்ள மிளகாய், கத்தரி, முருங்கை உள்ளிட்ட பயிர்களையும்,

    விவசாயி  பெரியசாமி என்பவரது வயலில் 0.40 எக்டேர் பரப்பளவில் முருங்கை பயிரினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பயிர்களின் விவரம், உற்பத்தி திறன், விற்பனை விவரம், சந்தை மதிப்பு, அரசின் மானியத்தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தும், தமிழக அரசின் தோட்டக் கலைத்துறையின் மூலம் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தும் திட்டங்களை அனைத்து விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    முன்னதாக, தேளுர் கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் இயற்கை பண்ணைய சான்று பெற்று தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்து வருவது குறித்தும் இயற்கை பண்ணை முறையில் அவர் கள் செய்து வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் கலந்துரையாடினார்.

    Next Story
    ×