என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ரூ.1 கோடி உற்பத்தி மானியம் வங்கியில் செலுத்தப்பட்டது-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
சொர்ணவாரி விவசாயிகளுக்கு ரூ.1 கோடி உற்பத்தி மானியம் வங்கியில் செலுத்தப்பட்டது என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொர்ணவாரி பருவத்தில் நெல்சாகுபடி செய்யாமல் நவரை பருவத்தில் சாகுபடி செய்த ஆயிரத்து 208 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 2 ஆயிரத்து 58 ஏக்கருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரம் அவர் களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல 156 புதுவை அட்டவணை விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 214 ஏக்கருக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு சம்பா பருவத்தில் விதை நெல் உற்பத்தி செய்து விவசாயத்துறைக்கு வழங்கிய 33 விவசாயிகளுக்கு ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 640 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு சம்பா மணிலா, பயிறு வகைகள், எள், சிறுதானியங்கள், பருத்தி சாகுபடி செய்த 80 அட்டவணை விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய மாக ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம், சொர்ணவாரியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






