என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் வருகிற 29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் வருகிற 29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,
கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கள பிரசனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகள் மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
Next Story






