என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பூசாரி மயங்கி விழுந்து சாவு
பாகூர் அருகே கோவில் பூசாரி மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே சேலியமேடு வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சடையச்சியம்மன் (வயது 47) இவரது தம்பி செந்தில் குமார் (45) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அங்குள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலைசெய்து வந்தனர்.
கோவிலில் பக்தர்கள் பக்தர்கள் அளிக்கும் தட்சனை பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செந்தில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவந்ததால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அவரது சகோதரி சடையச் சியம்மன் கண்டித்தும் செந்தில் குமார் மது பழக்கத்தை நிறுத்தவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது சகோதரி சடையச்சியம்மன் மற்றும் உறவினர்கள் செந்தில் குமாரை மீட்டு கரிக்கலாம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது சகோதரி சடையச்சியம்மன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






