என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்தாலம் கல்லூரியில் கலெக்டர் லலிதா ஆய்வு.
    X
    குத்தாலம் கல்லூரியில் கலெக்டர் லலிதா ஆய்வு.

    அரசு கல்லூரியில் கலெக்டர் ஆய்வு

    குத்தாலம் அரசு கல்லூரியில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    குத்தாலம்:

    குத்தாலம் அரசு கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி 2020-21-ம் முதல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 325 மாணவர்கள் படிக்கும் இக்கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு வகுப்புகள் தற்போது நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கப்பட
    உள்ள நிலையில், இக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரவும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் திருவாலங்காடு கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, மாவட்ட கலெக்டர் லலிதா கல்லூரியின் அடிப்படை
    வசதிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாணவர்களுக்கு இடநெருக்கடி இன்றி அமருவதற்கு விரைவில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத்தரப்படும். குறிப்பாக கழிப்பிட வசதி மற்றும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி சென்றுவர பேருந்து வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    ஆய்வின்போது ராமலிங்கம் எம்.பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×