என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதி தந்தை-மகன் பலி

    ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதியதில் தந்தை&மகன் பரிதாபமாக இறந்தனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் மசூர் அஹமத் (வயது 49), இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகன் முயிஸ் (6) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை மசூர்அஹமத் தனது மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மேல் விஷாரத்தில் இருந்து கீழ்விஷாரம் நோக்கி வந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மசூர் அஹமத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த முயிசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே முயிஸ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×