என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம்.
    X
    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை

    ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சேலம் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    திருச்சி கதர் கிராம தொழில் வாரிய மண்டல துணை இயக்குனர் பாலகுமாரன் திட்ட விளக்கவுரையாற்றினார்.விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.

    மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

    இந்த விழாவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்திடும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் உற்பத்தி செய்வது கடினம் என்பதால் தமிழகத்தில் உள்ள மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டோர்ளில் 11,822 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 2021-2022ம் ஆண்டிற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 231 மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் தொகை ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் நிதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மண்பாண்ட உற்பத்தி பயனாளிகளுக்கு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். 

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.77.58 கோடி மதிப்பில் 24,980 நபர்களுக்கு கூட்டுறவு விவசாயிகளுக்கு 5 சவரன் நகைகடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதன்படி பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி செய்ததை அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள் அனிதா குப்புசாமி(காவேரிப்பாக்கம்) வடிவேல்(நெமிலி) கலைக்குமார்(சோளிங்கர்) ஒன்றியக்குழு துணை தலைவர்கள், நகரமன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் பயணாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிவில் கண்காணிப்பாளர் நாகலிங்கம் நன்றி கூறினார். 

    முன்னதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக் கப்பட்ட பொருட்களை கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்களை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.
    Next Story
    ×