என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
சாட்சி கூற வந்தவர் மயங்கி விழுந்து சாவு
புதுவை கோர்ட்டுக்கு சாட்சி கூற வந்தவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் தினமும் ஏராளமான வழக்கு விசாரணைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த வழக்கு விசாரணைக்காக தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோர்ட்டுக்கு வந்து செல்வர். அதுபோல் புதுவை கோர்ட்டில் நடைபெற்ற சிவில் வழக்கு ஒன்றில் சாட்சி கூற கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்தார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






