என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மது குடித்து விட்டு ரகளை செய்த 5 பேர் கைது

    புதுவையில் தனித்தனி இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில்  ரோந்து பணி சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மதுகுடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொது மக்களை மரியாதைக் குறைவாகதிட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் முத்தியால் பேட்டை மஞ்சினி நகர் பஜனை மடத்து வீதியை சேர்ந்த தாமு (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதுபோல் புதுவை வழுதாவூர் சாலையில் மதுக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட முத்திரையர் பாளையம் பொறையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகன்ராஜ் (32) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும் புதுவை அண்ணா சாலையில் பிரபல ஜவுளிக் கடை அருகே ரகளையில் ஈடுபட்ட கோவிந்த சாலையை சேர்ந்த ஜோசப் (39) மற்றும் திப்புராயப் பேட்டையை சேர்ந்த ஜான்சன் (24) ஆகிய 2 பேரை பெரிய கடை போலீசாரும் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே கீழ் அக்ரகாரம் அரசு பள்ளி அருகே பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×