என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்21 March 2022 6:05 AM GMT (Updated: 21 March 2022 6:05 AM GMT)
சம்பளம் வழங்காத ஜெயங்கொண்டம் நகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 188 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளமும், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இவர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து துப்புரவு பணியாளர்கள் கூறும் போது,
எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்கவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு சம்பளத்தை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதனை கேட்ட அதிகாரிகள், அவர்களிடம் சமாதான பேச்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 188 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளமும், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இவர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து துப்புரவு பணியாளர்கள் கூறும் போது,
எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்கவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு சம்பளத்தை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதனை கேட்ட அதிகாரிகள், அவர்களிடம் சமாதான பேச்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X