என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.
    X
    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.

    மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா

    திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    மகான் திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 52-வது ஆண்டு விழாவையொட்டி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கோட்டக்குப்பம் பேரூராட்சி வளாகம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் கோட்டக் குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத போதகர் அடைக்கலராஜ், துரைராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மு.மு.க., பா.ம.க., த.வா.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், அப்பகுதி பிரமுகர்கள் முகமது அக்கீம், முருகன், சங்கர், தேவதாஸ், வள்ளலார், காளியம்மாள், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    விழாவினை ஒருங் கிணைப்பாளர் வக்கீல் சட்ட திருநாவுக்கரசு ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
    Next Story
    ×