என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா

    புதுவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

     புதுவை மாநிலத்தில் 249 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் மாகியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

    தற்போது  புதுவையில் 7பேர், காரைக்காலில் 4 பேர், மாகியில் 2 பேர் என 13 பேர் மட்டுமே வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ மனையில் யாரும் தொற்றால் அனுமதிக்கப்படவில்லை.  ஒருவர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    இதில் 1 லட்சத்து 63 பேருக்கு 797 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×