என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயை தடுக்க தடுப்பூசி முகாம்

    கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயை தடுக்க தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
     பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

    பெரம்பலூர்  மாவட்டத்தில்  கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2ம் சுற்றாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. 

    இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், 27 குழுக்கள் அமைக்கப் பெற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பு திட்டம் நாளை 21&ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி  வரை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக போடப்படும். 

    எனவே, அனைத்து கால் நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசிகுழு வினர் வரும்போது கன்றுக் குட்டிகளுக்கும் மற்றும் கறவைமாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனை த்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பவர்கள்பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×