search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்மாற்றிகள் செயல்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
    X
    மின்மாற்றிகள் செயல்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    ரூ.25 லட்சத்தில் 3 மின்மாற்றிகள் திறப்பு

    செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் 3 மின்மாற்றிகள் திறக்கப்பட்டது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி, நல்லாடை மெயின் ரோட்டில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு பரசலூர் ஊராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் (சீர்காழி) லதாமகேஸ்வரி, முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் நாகராஜன் வரவேற்றார். நல்லாடை மெயின் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 100 கிலோ வோல்ட் கொண்ட மின் மாற்றியும், அதே இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 63 கிலோ வோல்ட் கொண்ட மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஆறுபாதி ஊராட்சியில் 100 கிலோ வோல்டில் விவசாயத்திற்கு ஒரு லட்சம் பம்பு செட்டுகள் மின் இணைப்பு கொடுத்து பயன்படும் வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

    மொத்த செலவு ரூ.25 லட்சம் ஆகும். இதனை கோட்டப் பொறியாளர் லதா மகேஸ்வரி செயல்பாட்டுக்கு திறந்துவைத்தார். செம்பனார்கோயில் உதவி செயற் பொறியாளர்கள் விஸ்வநாதன், அப்துல் வஹாப், மற்றும் மின் வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×