search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

    முசிறியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கழக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பார்த்திபன்,  கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ராமு, மாவட்டக் கழக துணைச் செயலாளர் ரவீந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ், 

    தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், முசிறி நகரக் கழகச் செயலாளர் பேங்க் ராமசாமி, நகர அவைத்தலைவர் சேகர் அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் பாலகுமார், கட்சி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில்  உறுப்பினர்களுக்கு கழக உறுப்பினர் அட்டை, புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் களுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப் பட்டது. 

    மேலும் வருங்காலத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கு எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
    Next Story
    ×