என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்த காட்சி.
    X
    மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்த காட்சி.

    மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    நெட்டப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில்  பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற விரிவுரையாளர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி முக்கியத்துவம் குறித்தும் பொதுத்தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    விழாவில் 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முடிவில் தலைமையாசிரியர் (பொறுப்பு) நூர்முகமது நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சித்தானந்தம், சதீஷ், ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×