என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறுந்தொழில் முனைவோர் பயிற்சி தொடக்க விழா நடந்த காட்சி.
பெண்களுக்கு குறுந்தொழில் முனைவோர் பயிற்சி
பெண்களுக்கு குறுந்தொழில் முனைவோர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தேசிய நபார்டு வங்கி மற்றும் தீபம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி அறக்கட்டளையின் சார்பில், புதுவையை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு குறுந் தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி மற்றும் ஆர்யா ஒர்க் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி இப்பயிற்சி முகாமின் தொடக்க விழா பாகூரில் உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் வரவேற்றார்.
இந்தியன் வங்கியின் முன்னோடி மாவட்ட மேலாளர் உதயகுமார் தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்தும், புதுவை பாரதியார் கிராம வங்கி தலைவர் ரஞ்சித்குமார், மகளிர் சுய உதவி பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் பேசினர்.
புதுவை பாரதியார் கிராம வங்கி பாகூர் கிளை மேலாளர் லோகேஷ் கலந்து கொண்டார். இப்பயிற்சி முகாம் வருகிற 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Next Story






